சோம்பேறித்தனத்தை போக்க எளிய வழிகள் ஏழு
நம்மில் பல பேர் ஒரு செயலை செய்யாமல் நாளை செய்யலாம், பிறகு செய்யலாம் என்று எதோ ஒரு சாக்கு சொல்லி தட்டி கழிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துக்கொண்டு இருக்கிறோம். அவ்வாறு நாம் ஏன் செய்கிறோம்? நமக்கு சோம்பேறித்தனம் இருக்கிறது என்பது ஒரு காரணம். ஆனால் அது மட்டுமே காரணமில்லை. அந்த செயலை செய்வதற்கு மனதில் நாட்டம் இல்லாமல் இருக்கலாம், அல்லது எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கலாம்.